Thursday, July 4, 2013

தமிழன்னை....

கலப்படம் இல்லாத அமுதே,
இளமை மாறாத அழகே,
கவிகள் போற்றிடும் இறையே,
அறிவுபசியை போக்கிடும் உணவே,
உருவம் இல்லாத ஒரு உறவே,
உலகை காண உதவும் விழியே,
தமிழே...!!!
அம்மா என்று அழைக்கும் முன்னரே
அகரத்தை எழுதி பழகினேன்
அது சொல்லாமல் சொன்னது
நீ தான் எந்தன் முதல் தாயென...!!!

0 comments:

Post a Comment