Tuesday, December 17, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 44

இன்றைய மனித வாழ்வில் கைபேசி என்பதே காதலுக்கென்றாகி விட்டது. காதல் தொடங்குவதும், அழகாய் வளர்வதும், ஏன் பல நேரங்களில் அது முடிவதும் கூட கைப்பேசியில் தான்.

இந்த முறை இவள் என்ன சொல்ல போகிறாளோ என்ற கலக்கத்துடனே தான் அழைப்பை ஏற்றான் அவன். "என்ன கண்ணா.. வேலையாய் இருக்கிறாயா? தொந்தரவு செய்துவிட்டேனா?" என்றாள் அவள்.

இந்த கேள்வி பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டதோ. அதன் பதிலை அறிந்திருந்தும் அக்கேள்வியை கேட்பதே அவர்களது வழக்கம் ஆகிவிட்டது. எந்த வேலையில் நாம் இருப்பினும் அதை அவர்களை விட முக்கியம் என்பது போல் நாம் காட்டிக்கொள்ள கூடாது. இது எழுதப்படாத நியதி. அப்படி காட்டிக்கொண்டால் அதன்பின் அவர்களது கோபத்திற்கு முன் நிற்பதென்பது சாத்தியமில்லையே.

எனவே தான் ஆண்கள் எப்போதும் அந்த கேள்விக்கு பொதுவான ஒரு பதிலையே கூறிவிடுகின்றனர். அவன் மட்டும் என்ன விதி விளக்கா?

"இல்லை தேவி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சொல்" என்றான் அவன்.

"நாளை நாம் சந்திக்கலாம் அல்லவா? உனக்கு வேலை ஏதும் இல்லையே?" கேட்டாள் அவள்.

அவன் அவளை சந்திப்பதாய் சொன்னதும் அதை மறந்து கவியை நாளை பூங்காவிற்கு அழைத்து செல்வதாய் அவன் சொன்னதும் அவனது நினைவிற்கு வந்தது. ஏது சொல்வது என்று புரியாமல் விழித்தான் அவன்.

"தேவி, நாளை என் உறவினர் ஒருவரை காண செல்கிறேன்" தட்டு தடுமாறி பொய்யினை உரைத்தான் அவன்.

சற்று நேரத்திற்கு மௌனமாகி போனாள் அவள். அவளை காயப்படுத்திய உணர்வு எழுந்தது அவனுள். சில வருடங்களுக்கு முன்பு அவன் அந்த நிலையில் தானே இருந்தான். அவனுக்கு அந்த வலி தரும் வேதனையை அவன் நன்கு அறிவான்.

0 comments:

Post a Comment