எதையோ வேண்டி அழுது அடம் பிடிக்கும் மழலைக்கு அந்த பொருளை வாங்கி கொடுக்கின்ற பொழுது அதன் குரலில் ஏற்படும் மாற்றம் தான் அவளது குரலிலும் ஏற்பட்டது, அவன் இப்படி கேட்டதும்.
"உன்னை பார்ப்பதை விட முக்கியமான வேலை வேறு என்ன இருக்க முடியும் எனக்கு. உன்னோடு வாழ போகும் நொடிகளுக்காக தானே ஏங்கி கொண்டிருக்கிறேன் கண்ணா" அவள் சொன்னதை கேட்டதும் சிரித்தான்
அவன் வாழ்க்கையின் வினோதத்தை எண்ணி.
இதே வார்த்தைகள் தான் சொல்லப்பட்டன. முன்பு, அவனால் அவளிடம். இன்றோ, அவளால் அவனிடம். ஆனால் இந்த இடைவெளியில் காலம் தனக்கான பங்காய் ஒரு புதிரான நாடகத்தை அரங்கேற்றி விட்டிருந்தது.
"நீ நினைப்பதை போல் உன்னை மகிழ்விக்கும் பதிலை உன்னிடம் நான் சொல்ல போவதில்லை தேவி. உன் மனதை காயப்படுத்த போகும் பதில் தான் என்னிடம் உள்ளது உனக்காக. நீ என் வாழ்வில் மீண்டும் வராமலே போயிருக்கலாம்" மனதுக்குள் சொல்லி கொண்டான் அவன்.
"சரி மாலை பூங்காவில் சந்திக்கலாம்" சொல்லிவிட்டு அவள் அழைப்பை தூண்டிக்க, இன்று எப்படியும் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியோடு கைப்பேசியை வைத்துவிட்டு தனது வீட்டை நோக்கி பயணித்தான் அவன்.
மாலை பொழுது,
கண்ணனுக்காக காத்திருந்தாள் தேவி. அவளது மனம் அடைய போகும் வலியினை அறியாத அவளது இதழ்கள் புன்னகையை உதிர்த்தபடி இருந்தன. அவனது வண்டியின் ஓசை கேட்டதும் அந்த புன்னகை அதிகரித்தது.
அவளது அருகில் வந்து நின்றான் அவன். "வெகு நேரமா ..." அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் அருகில் சென்று அவனை அணைத்து கொண்டாள் அவள்.
என்ன செய்வதென்று புரியாதவனாய் அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு அவளிடம் அவன் பேச தொடங்கினான். "தேவி, உன்னிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும்" என்று அவன் சொன்ன அதே வேளை அங்கே விடுதியில் அழுது கொண்டிருந்த கவியிடம் அவளது தோழி மலர் கேட்டாள் "என்ன நடந்தது" என்று.
"உன்னை பார்ப்பதை விட முக்கியமான வேலை வேறு என்ன இருக்க முடியும் எனக்கு. உன்னோடு வாழ போகும் நொடிகளுக்காக தானே ஏங்கி கொண்டிருக்கிறேன் கண்ணா" அவள் சொன்னதை கேட்டதும் சிரித்தான்
அவன் வாழ்க்கையின் வினோதத்தை எண்ணி.
இதே வார்த்தைகள் தான் சொல்லப்பட்டன. முன்பு, அவனால் அவளிடம். இன்றோ, அவளால் அவனிடம். ஆனால் இந்த இடைவெளியில் காலம் தனக்கான பங்காய் ஒரு புதிரான நாடகத்தை அரங்கேற்றி விட்டிருந்தது.
"நீ நினைப்பதை போல் உன்னை மகிழ்விக்கும் பதிலை உன்னிடம் நான் சொல்ல போவதில்லை தேவி. உன் மனதை காயப்படுத்த போகும் பதில் தான் என்னிடம் உள்ளது உனக்காக. நீ என் வாழ்வில் மீண்டும் வராமலே போயிருக்கலாம்" மனதுக்குள் சொல்லி கொண்டான் அவன்.
"சரி மாலை பூங்காவில் சந்திக்கலாம்" சொல்லிவிட்டு அவள் அழைப்பை தூண்டிக்க, இன்று எப்படியும் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியோடு கைப்பேசியை வைத்துவிட்டு தனது வீட்டை நோக்கி பயணித்தான் அவன்.
மாலை பொழுது,
கண்ணனுக்காக காத்திருந்தாள் தேவி. அவளது மனம் அடைய போகும் வலியினை அறியாத அவளது இதழ்கள் புன்னகையை உதிர்த்தபடி இருந்தன. அவனது வண்டியின் ஓசை கேட்டதும் அந்த புன்னகை அதிகரித்தது.
அவளது அருகில் வந்து நின்றான் அவன். "வெகு நேரமா ..." அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் அருகில் சென்று அவனை அணைத்து கொண்டாள் அவள்.
என்ன செய்வதென்று புரியாதவனாய் அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு அவளிடம் அவன் பேச தொடங்கினான். "தேவி, உன்னிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும்" என்று அவன் சொன்ன அதே வேளை அங்கே விடுதியில் அழுது கொண்டிருந்த கவியிடம் அவளது தோழி மலர் கேட்டாள் "என்ன நடந்தது" என்று.



0 comments:
Post a Comment